Tuesday, March 18, 2014

தகவல் தொழில்நுட்பத் துறை பெண் ஊழியர்களுக்கான கருத்துக்கணிப்பு


பெண் பாலினம் பற்றிய புரிதல்,பெண்கள் மேம்பாடு குறித்து தகவல் தொழில்நுட்ப துறை பெண் பணியாளர்கள் மத்தியிலான ஆய்வு....



தொழில் நுட்பத் துறையில் வேலைப் புரியும் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த ஆய்வு, தொழில் நுட்பத் துறையை நோக்கிய எங்கள் இயக்கத்தின் முதல் முயற்சியாகும்.இது பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு சமூக ஆய்வு.



நவீன தொழில்துறையான தொழில் நுட்பத் துறையில் தான் பெண்களால் மற்ற துறைகளை விட ஒப்பீட்டளவில் உரிமைகளை அனுபவிக்க முடிகின்றது. இருப்பினும் பெண்கள் வேலை, வாழ்க்கை இரண்டிலும் சவால்களை சந்திக்க வேண்டிருக்கிறது. தொழில் நுட்பத் துறையில் வேலைப் புரியும் பெண்களின் அன்றாட வாழ்வின் உண்மை நிலைமையை அறிவதற்கும், பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளைக் கண்டறிந்து , இந்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடுவதற்கும் இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறோம்.





இந்த ஆய்வு சமூக ஆராய்ச்சி நோக்கத்திற்காக மட்டுமே, ஆய்வின் மூலம் கிடைக்கும் விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும், எனவே இந்த ஆய்வை எந்த தயக்கமும் இன்றி மேற்கொள்ளுங்கள், சக பெண் தோழிகளுடனும் பகிருங்கள். இந்த ஆய்வை நடத்துவது சேவ் தமிழ்சு இயக்கம் - ஐ.டி மற்றும் மற்ற தொழில் துறையில் வேலைச் செய்யும் ஊழியர்களின் கூட்டு இயக்கம்.




இந்த ஆய்வு பற்றிய மேலதிக தகவல்கள் பெற விருப்பம் இருந்தால் 98407 13315 என்ற கைப்பேசி எண்ணை தொடர்புக் கொள்ளவும். இந்த ஆய்வின் முடிவு பற்றியும், மேலும் தகவல் அறியவும், உங்கள் மின்னஞ்சல் முகவரியும், கைப்பேசி எண்ணையும் ஆய்வின் கடைசிப் பக்கத்தில் பகிரவும்.

http://www.itsurvey.in

No comments:

Post a Comment