Wednesday, July 2, 2014

மாக்களின் சாதி



பொத்தி பொத்தி ஈன்ற எம்மனம் அவர்தம் வேள்வியிலே
கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே
பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக
பித்தம் பிடித்துத் திரிவ தின்றோ இழிநிலையாக
எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம்
சத்திய சோதனையு மதனால் எடுத்தது தெருவிலோட்டம்
நித்தமும் நில்லாது அழிக்கிறது மாக்களின் சாதி
நத்தம்காலனியி லதனால் ஓலமும் பழிபாவமும் மீதி
 
-    குட்டிமணி செங்குட்டுவன்


No comments:

Post a Comment