Wednesday, January 22, 2014

வரலாறென்பது.....

வரலாறென்பது
வாக்கியங்களால்
நிரப்பப்படுவதன்று!
வழிந்தோடும் மனிதக்குருதிகளால்
வரையப்படுவது
இன்று வரைக்கும்
போராட்டமும் பேரழிவுந்தான்
வாழ்க்கையாகிவிட்டது
வரலாறென்பது
வாக்கியங்களால்
நிரப்பபடுவதன்று!


சந்தாவில் துவங்கி
ஜார்கண்ட் வரை
நீளும்...நீளும்
கழுமரங்களாய் நீளும்
கலிங்கத்தை மிஞ்சும்
மனிதப்படுகொலைகள்
காக்கிச் சட்டைகள்
நிகழ்த்திய காமக்கொடூரங்கள்
புழை கிழிந்த பெண்டீர்தம்
மரண ஓலம்
பாறைகளும் வருத்தப்படும்
மறைவிடம் தந்த மகாபாவத்துக்காய்
லத்தி தந்த குற்றத்துக்காய்
தலைகுனிந்து வெட்கப்படும்
மரங்கள்....!


அஹிம்சையை அரிதாரமாய்
பூசிக்கொண்ட அசோகச் சக்கரமே
எங்களை இந்தியன் என்று
இம்சிக்காதே
வரலாறென்பது
வழிந்தோடும் மனிதக்குருதிகளால்
வரையப்படுவது!

எங்கள்
வில்லையும்
அம்பையும்
களவாடியவர்களுக்குத் தெரியாது
கண்ணிவெடிகளை
எங்களுக்குக் கண்டுபிடிக்கத்
தெரியுமென்று!!! - பாரதி தாசன்

1 comment:

  1. மிக அருமை தோழர்
    புதிய கவிஞர் பாரதிதாசனுக்கு வாழ்த்துகள் !

    //எங்கள்
    வில்லையும்
    அம்பையும்
    களவாடியவர்களுக்குத் தெரியாது
    கண்ணிவெடிகளை
    எங்களுக்குக் கண்டுபிடிக்கத்
    தெரியுமென்று!!! - பாரதி தாசன் //

    ReplyDelete