“The Tragedy of Mankind is not the Brutality of Few but the Silence of Many”‐ Martin Luther King Jr.

Monday, November 7, 2011

காமன்வெல்த் மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் பங்கேற்பு

அக்டோபர் 28 - 30, ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் 54 நாடுகள் கலந்துகொண்டன. இம்மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் (Transnational Government of Tamil Eelam- TGTE) பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. டீ.ஜி.டீ.ஈ யின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் இதில் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை காமன்வெல்த் கூட்டமைப்பின் சார்பாக விசாரிக்க வேண்டுமென்றும், போர்க்குற்ற விசாரணைக்காக காமன்வெல்த் அமைப்பின் சார்பாக மனித உரிமை ஆணையத்தை நிறுவ வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள், விசாரணைக்காக காமன்வெல்த் மனித உரிமை ஆணையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது தமிழீழ பொதுமக்கள் கொல்லப்படுவது தெரிந்தே இந்தியா அந்நாட்டு அரசுக்கு ஆயுதம் வழங்கியதாலும், அந்நாட்டு ராணுவத்திற்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டதாலும், இந்தியாவும் போற்குற்றவாளியின் வரிசையில் நிற்க நேரிடும் என்பதாலேயே, காமன்வெல்த் சார்பாக மனித உரிமை ஆணையம் அமைய இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன்மூலம் இலங்கை போர்குற்றம் புரிய இந்தியா உடந்தையாக இருந்தது என்பதே உறுதிபடுத்தப்படுகிறது.

சமீபத்தில், தி ஆஸ்திரேலியன் கிரீன் கட்சி, ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. ஆஸ்திரேலியாவின் பெர்த், சிட்னி, மெல்பர்ன், டார்வின் போன்ற நகரங்களில் தமிழர்களோடு ஆஸ்திரேலியர்களும் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். டீ. ஜி. டீ. ஈ க்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கொடுக்க பட்ட வாய்ப்பு என்பது, எதிர்காலத்தில் அமைய இருக்கிற தமிழீழ அரசுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

0 comments:

Post a Comment