Thursday, November 19, 2009

வாழ்வை அர்பணிபோம்.. எம் மாவீரர்களுக்கு!

நண்பர் யுவன் எழுதியது.....

வாழ்வை அர்பணிபோம்.. எம் மாவீரர்களுக்கு!




தானே தன் தோற்றம் அறியாத
பழமை வாய்ந்தது இத் தமிழ் மரம்
இன்று இதனை ஒட்டிப் பிழைக்கவந்த
மலையாளிகளும் சிங்களவனும் ஆரியர்களும்
இத் தமிழ் மரத்தின் வேரை சாய்த்திட துடிக்கிறார்கள்
முள்ளிவாய்க்கால் கரையில் எம் தமிழச்சியின் வயிற்றில் இருந்த கருவின் குறுதியினையும் உறிஞ்சிக் குடித்த இரத்தக் காட்டேறி கருணாக்கள்
இன்று எம் தெய்வத்துறவிகளின் தியாகத்தை
கொச்சைப் படுத்தி முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்..
மலேசிய, மலையக, தமிழக, ஈழ, இலண்டன், கனேடிய
இசுலாமிய, கிறித்துவ தமிழன் என்று கூறு போட்டு
இத் தமிழ் மரத்தில் வேற்றுமை விதைக்கிறார்கள் நம் எதிரிகளும் துரோகிகளும்
இன்னும் பல நுற்றாண்டு காலம் இத்தமிழ் மரத்தை வளப்படுத்தி காத்திடும் பணி
இன்று உலகெங்கும் பரவி வாழும்
எம் தமிழ் இளையோர்கள் கையில் மட்டுமே உள்ளது
அறியாமையும் வேற்றுமையும் கொன்று இத்தமிழ் மரத்திற்கு
ஒரு தேசத்தை கட்டி எழுப்பும் பொறுப்பும் எம் இளையோரிடமே கொடுக்கப்பட்டுள்ளது உழைத்திடு வோம் எம் இளைய உறவுகளே எம் தேசத்தை கட்டி எழுப்பிட!!
தமிழர் வாழ்வில் புனித நாள் இம் மாவீரர் நாள்!!
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை வணங்கிடுவோம்.. தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்!!

No comments:

Post a Comment